” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கமலா ஜெயபாலன்

வசந்தம்
தென்றல் வீசவர தெம்மாங்கு பாடிவர
தளிரும் துளிர்த்து தாவரங்கள் பசமைதர
அன்பின் ஊற்றாய் அன்றில்கள் இசைபாட
அசைதாடும் மணம்கமழும் அல்லிகளும் அழகாய்
இன்பம் பொங்கிட இல்லம் சிறந்திட
இரவும் குறைந்து இதமான பகல்வர
உன்னதமாய் உயிரினங்கள் உலா வரவும்
உதித்திடுவான் சூரியனும் உகவை பொங்க

வாழ்வினில் வசந்தம் வந்திடும் போது
வறுமையும் அகன்று வளமும் பெருகும்
தாழ்வும் அகன்று தரமும் உயந்து
தங்கமாய் மனமும் தண்ணொளி யாகும்
ஊழ்வினை அகன்று ஒளியும் பிறக்கும்
ஒற்றுமை வாழ்வில் ஒன்றியே சேரும்
பாழ்படா வாழ்வும் பற்றும் ஓங்கவே
பாசமும் நேசமும் பரவச வசந்தமே

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan