பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

அடையாளம்

நகுலா சிவநாதன்

அடையாளம்

அடையாளம் காத்த அமைதிவாழ்வு
அன்னை தேசத்தின் போரால் சிதைந்தது
அகதி வாழ்வில் புதைந்த நாட்கள்
ஆகுதியாய் விடுதலை நோக்கி எழுந்தது
படையோடு தாக்கிய பகைவனின் ஏவுகணை
பாருக்குள் ஏதிலியாய் ஆக்கிய நாட்கள் எத்தனை?

நடைப்பிணமான நம்தேச மக்கள்
நாலாபுறமும் சிதறிய தேசங்களில்
வாழ்விழந்த சோகத்திலும் வரலாறு படைத்தனர்
அடையாளம் காத்திட அகதிக்காய் ஓர்தினம்

மொழியும் சமயமும் இருகண்களாய்
மொழிந்த வாழ்வுக்குள்
வழிகாட்டி மனிதராய் அடுத்தசந்ததியை
அன்னைத்தமிழோடும் ஐரோப்பிய தேசமதில்
அகதியென வாழ்ந்தாலும்
சகதியாய் இல்லாமல் சாதனை படைக்கும்
சரித்திரபுருசர்களாய் ஆக்கிய தமிழர்
அடையாளம் காத்து அவனியில் உயர்கின்றனர்

நகுலா சிவநாதன் 1768

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading