அடையாளம்

நகுலா சிவநாதன்

அடையாளம்

அடையாளம் காத்த அமைதிவாழ்வு
அன்னை தேசத்தின் போரால் சிதைந்தது
அகதி வாழ்வில் புதைந்த நாட்கள்
ஆகுதியாய் விடுதலை நோக்கி எழுந்தது
படையோடு தாக்கிய பகைவனின் ஏவுகணை
பாருக்குள் ஏதிலியாய் ஆக்கிய நாட்கள் எத்தனை?

நடைப்பிணமான நம்தேச மக்கள்
நாலாபுறமும் சிதறிய தேசங்களில்
வாழ்விழந்த சோகத்திலும் வரலாறு படைத்தனர்
அடையாளம் காத்திட அகதிக்காய் ஓர்தினம்

மொழியும் சமயமும் இருகண்களாய்
மொழிந்த வாழ்வுக்குள்
வழிகாட்டி மனிதராய் அடுத்தசந்ததியை
அன்னைத்தமிழோடும் ஐரோப்பிய தேசமதில்
அகதியென வாழ்ந்தாலும்
சகதியாய் இல்லாமல் சாதனை படைக்கும்
சரித்திரபுருசர்களாய் ஆக்கிய தமிழர்
அடையாளம் காத்து அவனியில் உயர்கின்றனர்

நகுலா சிவநாதன் 1768

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading