பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

அடையாளம்

நகுலா சிவநாதன்

அடையாளம்

அடையாளம் காத்த அமைதிவாழ்வு
அன்னை தேசத்தின் போரால் சிதைந்தது
அகதி வாழ்வில் புதைந்த நாட்கள்
ஆகுதியாய் விடுதலை நோக்கி எழுந்தது
படையோடு தாக்கிய பகைவனின் ஏவுகணை
பாருக்குள் ஏதிலியாய் ஆக்கிய நாட்கள் எத்தனை?

நடைப்பிணமான நம்தேச மக்கள்
நாலாபுறமும் சிதறிய தேசங்களில்
வாழ்விழந்த சோகத்திலும் வரலாறு படைத்தனர்
அடையாளம் காத்திட அகதிக்காய் ஓர்தினம்

மொழியும் சமயமும் இருகண்களாய்
மொழிந்த வாழ்வுக்குள்
வழிகாட்டி மனிதராய் அடுத்தசந்ததியை
அன்னைத்தமிழோடும் ஐரோப்பிய தேசமதில்
அகதியென வாழ்ந்தாலும்
சகதியாய் இல்லாமல் சாதனை படைக்கும்
சரித்திரபுருசர்களாய் ஆக்கிய தமிழர்
அடையாளம் காத்து அவனியில் உயர்கின்றனர்

நகுலா சிவநாதன் 1768

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading