கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அனலாக் ஆண்டுகள் நாற்பத்தைந்து..

வசந்தா ஜெகதீசன் .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின் கணக்கிலே தமிழரின்...

Continue reading

அடையாளம்

நகுலா சிவநாதன்

அடையாளம்

அடையாளம் காத்த அமைதிவாழ்வு
அன்னை தேசத்தின் போரால் சிதைந்தது
அகதி வாழ்வில் புதைந்த நாட்கள்
ஆகுதியாய் விடுதலை நோக்கி எழுந்தது
படையோடு தாக்கிய பகைவனின் ஏவுகணை
பாருக்குள் ஏதிலியாய் ஆக்கிய நாட்கள் எத்தனை?

நடைப்பிணமான நம்தேச மக்கள்
நாலாபுறமும் சிதறிய தேசங்களில்
வாழ்விழந்த சோகத்திலும் வரலாறு படைத்தனர்
அடையாளம் காத்திட அகதிக்காய் ஓர்தினம்

மொழியும் சமயமும் இருகண்களாய்
மொழிந்த வாழ்வுக்குள்
வழிகாட்டி மனிதராய் அடுத்தசந்ததியை
அன்னைத்தமிழோடும் ஐரோப்பிய தேசமதில்
அகதியென வாழ்ந்தாலும்
சகதியாய் இல்லாமல் சாதனை படைக்கும்
சரித்திரபுருசர்களாய் ஆக்கிய தமிழர்
அடையாளம் காத்து அவனியில் உயர்கின்றனர்

நகுலா சிவநாதன் 1768

Nada Mohan
Author: Nada Mohan