” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஒளிமயமான எதிர்காலம் துலங்கட்டும்

சிவருபன் சர்வேஸ்வரி

ஒளிமயமான எதிர்காலம் துலங்கட்டும்

ஒளிமயமான எதிர்காலம் ஒளிர்ந்துமே துலங்கிடவும்
வழியது மேவிட வார்த்தையும் இலங்கிட
கனிந்திடும் இன்பம் கவலைகளைப் போக்கவும்
விளித்து விளம்பிட விண்கூவி நின்றிட

இனித்த பிறவி எடுத்தபயன் அறிந்திட
கனிந்தநல் மனதில் கருணையும் கூடிட
பனித்துளி போன்றே எம்பாவும் தெளித்திட
திணித்திடும் திகழமுதம் தித்திப்பாய் இனித்திட

அவைக்கு ஓர்விருந்து அமுதமாய் பொழிந்திட
சுவைக்கு நல்மருந்தாய் தூய்மையும் அடைந்திட
நகைச்சுவை கொடுத்து மகிழ்விக்க வேண்டும்
அகமதிலென்றும் அறத்தின் வழியே ஏகுவோம்
இகமதில் ஒளிமயமான எதிர்காலம் துலங்கட்டும்

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan