வசந்தா ஜெகதீசன்

பள்ளிப் பருவம்…
தொட்டுயர்ந்து துலங்குகிறோம்
துறைசார்ந்த மிளிருகிறோம்
எட்டி நிற்கும் ஏற்றமதை ஏற்றி வைத்த முதற் புள்ளி
கற்றுத் தந்த பாடங்களும்
காட்டி நின்ற வழிகளுமே
பெற்றுயர்ந்து பேறுகொள்ள
பெருமை சேர்த்து பெயர்பொறிக்க
முதற்புள்ளி இட்ட கோலம்
முழுநிலவாய் துலங்கும் நேரம்
படிப்படியாய் புள்ளியிட்டு
பள்ளிக்காலக் கோலமிட்டோம்
பசுமரத்தாணி போல
பதிந்திருக்கும் பள்ளிக்காலம்
பசுமையின் சோலைகளாய் பட்டாம் பூச்சிகளாய் சிறகடித்தோம் சீருடையில்
செதுகலிட்ட செம்மை வாழ்வில்
நட்புகள் வடமிழுக்கும்
நம்பிக்கை துடுப்பாகும் பட்டங்கள் பலவாகும் பசுமையில் நினைவு மூழ்கும்
அட்சயபாத்திரம் அனைவர்க்கும் பள்ளிக்காலம் ஆசான்கள் நன்றி செப்பும் அழியாத நினைவு நீளுமே!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading