ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

கஞ்சா

சிவருபன் சர்வேஸ்வரி

கஞ்சா

காலம் நகர்கின்றது கவலைகள் பிறக்கின்றது
வாழ்வுகள் மலருமென்று மனதிலே உறுதியொன்று
தாழ்வுகள் தேடிவரத் தாய்மனமும் வாடிநிற்க
தேடும் குழந்தைகள் இன்றென்ன கஞ்சா

கஞ்சா கஞ்சா காசினியெங்கும் கஞ்சா
நஞ்சாக வருமென்று கனவிலும் நினையாமல் கஞ்சா
கஞ்சாவும் இல்லையென்றால் வாழ்வும் இல்லையென்பார்
துஞ்சித்து நிற்கின்றனர்
துவண்டுமே விழுகின்றனர்
மிஞ்சிக் கொண்டது சாவிற்கு கஞ்சா

பஞ்சாகப் பறக்கின்றனர் பறந்துமே மோதுகின்றனர்
கஞ்சாவைக் கண்டதும் கரும்பாகச் சுவைக்கின்றனர்
காய்ந்த மாடுகள் கம்பிலே விழுந்தது போல் கஞ்சா
கஞ்சாவும் வேண்டாம் காலனையும் தேடாதே
இச்ச்கொண்டே எமனையும் நாடாதே
கஞ்சாவின் எண்ணத்தை விரட்டிடவும் மாட்டாயா

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading