ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

கஞ்சா

நேவிஸ்பிலிப் கவி இல(140) 04/07/24

வையத்தில்அஞ்சுவதற் கஞ்சா
கொள்ளை போகும் அவமானத்திற் கஞ்சா
அருளின்றி பொருள் காண களவாய்
வளர்த்த செடி கஞ்சா

இறைத் தண்டனைக் கஞ்சா
நெறி பிறழும் பொய்மைக் கஞ்சா
பஞ்சமா பாதகத்துக் கஞ்சா
தொலைந்து போகும் காலத்திற் கஞ்சா
குடும்பச் சீரழிவுக் கஞ்சா
உறவுகளின் எதிர் காலத்திற் கஞ்சா
நாசமாகும் விளைவுக் கஞ்சா
வீழ்த்த வரும் பெரும் பகைக்கஞ்சா

பாவத் தீர்ப்புக் கஞ்சா
அநீதிக் கஞ்சா
மானம் மரியாதைக் கஞ்சா
பொய்ச்சான்று அவதூறுக் கஞ்சா
தீய செயல்களுக்கஞ்சாதோரிடையே

தம்பியுடையான் படைக் கஞ்சா
நெஞ்சுறுதியுடையான்
போருக்கஞ்சா
படைக்கஞ்சா
படை நடுங்கும் பாம்புக்கஞ்சா
பகைவரை எதிர்ப்பதற்கஞ்சா
எதிரியைத் தாக்குவதற்கஞ்சா
துன்பத்திற்கஞ்சா
வறுமை கொடுமைக்கஞ்சா
உண்மை பேசுவதற்கஞ்சா
நீதி நேர்மைக்காய் தட்டிக் கேட்பதற்கஞ்சா

சாதிப்பதற்கஞ்சா
இமயமேறுவதற்கஞ்சா
உச்சம் தொடுவதற்கஞ்சா
துணிவுடன் நடை பயில்வதற்கஞ்சா
எதிர்கொள்ள வரும்
சாவுக்கஞ்சா
வீரன்
நன்றி வணக்கம்,

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading