விந்தை மலர்கள்

நகுலா சிவநாதன்

விந்தை மலர்கள்

மலரும் பூக்கள் மணக்கும் பொழுதில்!
நிலவும் வந்து நெஞ்சை மயக்கும்
அழகு விரிக்கும் அருமைப் பூக்கள்
பழகும் மனத்தைப் பற்றி யிழுக்கும்

இதழ்கள் விரிந்தே இனிமை பரப்பி
முதன்மைப் பூக்கள் முகிழ்க்கும் நாளும்
நிறங்கள் பலவும் நிறைவாய்க் காட்டித்
திறனை கூட்டும் திடமாய் பூக்கும்

இறையை வணங்க இனிய பூக்கள்
நிறைக! நிறைக !நெஞ்சம் தன்னில்!!!
உலகை வியக்கும் உாிமைப் பூக்கள்
விலகா சொந்தம் விந்தை மலர்கள்

நகுலா சிவநாதன் 1773

Nada Mohan
Author: Nada Mohan