” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

விந்தை மலர்கள்

நகுலா சிவநாதன்

விந்தை மலர்கள்

மலரும் பூக்கள் மணக்கும் பொழுதில்!
நிலவும் வந்து நெஞ்சை மயக்கும்
அழகு விரிக்கும் அருமைப் பூக்கள்
பழகும் மனத்தைப் பற்றி யிழுக்கும்

இதழ்கள் விரிந்தே இனிமை பரப்பி
முதன்மைப் பூக்கள் முகிழ்க்கும் நாளும்
நிறங்கள் பலவும் நிறைவாய்க் காட்டித்
திறனை கூட்டும் திடமாய் பூக்கும்

இறையை வணங்க இனிய பூக்கள்
நிறைக! நிறைக !நெஞ்சம் தன்னில்!!!
உலகை வியக்கும் உாிமைப் பூக்கள்
விலகா சொந்தம் விந்தை மலர்கள்

நகுலா சிவநாதன் 1773

Nada Mohan
Author: Nada Mohan