Jeya Nadesan

தாய்க்கும் பிள்ளைக்கும் தலைவனார் தாயுமானவர் குடும்பத்தில் முதல் தலைவனாவர் உழைப்பால் மிகவும் உயர்ந்தவர் தந்தை எனும் உயர் மனிதரே பிள்ளைகளின்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

விருப்பத்தலைப்பு

இயற்கையின் தாண்டவம்

கொய்த உயிர்த்தொகை காட்டி
கொடுத்த சேதாரம் சுட்டி
செய்திக்கூட்டில் சோகத்தை நிரப்பி
வேற்று நினைவை விரட்டி
வேதனைத் தீயில் புரட்டி
கற்றுத்தருகுதோ பாடத்தை இயற்கை
காதறுந்த ஊசியும் கூடவாராக் கருத்தை

நொடியில் கொண்ட காவு
வந்தது பலருக்கும் சாவு
செடியில் பூத்த மலர்கள்
திசைக்கொன்றா யானது சிதறி
மாடி வீடென்ன மண்குடிசை யென்ன
கோடி கோடியாயும் போனதே
மோடி பார்த்தேங்க முன்னே பாய்ந்தோடி
ஆடு மாட்டத்திற்குப் பயந்தோடி

எடுக்க எடுக்கப் பிணக்குவியல்
தடுக்கும் வகையறியாத் தளர்வு
உடுக்கப்படுக்க இடமில்லா நிகழ்வு
கொடுக்கக் காரணமென்ன விளம்பு
கொடுப்பாரைக் காட்டவோ செய்கின்றாய் குந்தகம்

தாங்கிடும் பூமா தேவியே
புதைகுழி யாகலா மோநீ
வாங்கிடு காலம் வருமுன்னே
வாசலை நீயும் திறக்கலாமோ?

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan