” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

விருப்பத்தலைப்பு

இயற்கையின் தாண்டவம்

கொய்த உயிர்த்தொகை காட்டி
கொடுத்த சேதாரம் சுட்டி
செய்திக்கூட்டில் சோகத்தை நிரப்பி
வேற்று நினைவை விரட்டி
வேதனைத் தீயில் புரட்டி
கற்றுத்தருகுதோ பாடத்தை இயற்கை
காதறுந்த ஊசியும் கூடவாராக் கருத்தை

நொடியில் கொண்ட காவு
வந்தது பலருக்கும் சாவு
செடியில் பூத்த மலர்கள்
திசைக்கொன்றா யானது சிதறி
மாடி வீடென்ன மண்குடிசை யென்ன
கோடி கோடியாயும் போனதே
மோடி பார்த்தேங்க முன்னே பாய்ந்தோடி
ஆடு மாட்டத்திற்குப் பயந்தோடி

எடுக்க எடுக்கப் பிணக்குவியல்
தடுக்கும் வகையறியாத் தளர்வு
உடுக்கப்படுக்க இடமில்லா நிகழ்வு
கொடுக்கக் காரணமென்ன விளம்பு
கொடுப்பாரைக் காட்டவோ செய்கின்றாய் குந்தகம்

தாங்கிடும் பூமா தேவியே
புதைகுழி யாகலா மோநீ
வாங்கிடு காலம் வருமுன்னே
வாசலை நீயும் திறக்கலாமோ?

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan