மனோகரி ஜெகதீஸ்வரன்

விருப்பத்தலைப்பு

இயற்கையின் தாண்டவம்

கொய்த உயிர்த்தொகை காட்டி
கொடுத்த சேதாரம் சுட்டி
செய்திக்கூட்டில் சோகத்தை நிரப்பி
வேற்று நினைவை விரட்டி
வேதனைத் தீயில் புரட்டி
கற்றுத்தருகுதோ பாடத்தை இயற்கை
காதறுந்த ஊசியும் கூடவாராக் கருத்தை

நொடியில் கொண்ட காவு
வந்தது பலருக்கும் சாவு
செடியில் பூத்த மலர்கள்
திசைக்கொன்றா யானது சிதறி
மாடி வீடென்ன மண்குடிசை யென்ன
கோடி கோடியாயும் போனதே
மோடி பார்த்தேங்க முன்னே பாய்ந்தோடி
ஆடு மாட்டத்திற்குப் பயந்தோடி

எடுக்க எடுக்கப் பிணக்குவியல்
தடுக்கும் வகையறியாத் தளர்வு
உடுக்கப்படுக்க இடமில்லா நிகழ்வு
கொடுக்கக் காரணமென்ன விளம்பு
கொடுப்பாரைக் காட்டவோ செய்கின்றாய் குந்தகம்

தாங்கிடும் பூமா தேவியே
புதைகுழி யாகலா மோநீ
வாங்கிடு காலம் வருமுன்னே
வாசலை நீயும் திறக்கலாமோ?

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading