பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 277
10/09/2024 செவ்வாய்
“வலி”
——
வலிகள் நிறை இவ்வுலகு!
வராமல் பார்த்து நீ ஒழுகு!
வருவது உணரின் நீ விலகு!
வந்திடின் ஏற்று நீ பழகு!

சிரசில் இருந்து பாதம் வரை,
சிரமம் தந்திடும் இப்பூமி தரை!
அரசன் முதல் ஆண்டி வரை,
அதற்கு உண்டோ ஏதும்வரை!

வாழ்வே வலியின் வாகனமாம்!
வாழும் முறையே சாதனமாம்!
மீள்வே தந்தால் ஆதனமாம்!
மீண்டு வந்தால் வேதனமாம்!

கல்லு எங்கே பட்டிடினும்,
காலைத் தூக்கிடும் நாயினம்!
முள்ளு எங்கே தைத்திடினும்!
முடிவில் வலிக்குமே எம்மிதயம்!

கல்லால் பட்ட கடும்வலியும்,
காயம் காய்ந்திட மாய்ந்து விடும்!
சொல்லால் பட்ட சிறுவலியோ,
சொர்க்கம் வரை சேர்ந்துவரும்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading