ஔவை

வலி
====
வலிய வருது விரட்டவும் வருது
சலிப்புக் காட்டச் சடுதியாய் வருது
எலிக்கும் வருது எருமைக்கும் வருது
கலியில் எங்கும் கனமாய் வருது

பலிகள் பெருகப் பக்கம் வருது
கிலியில் தள்ளிக் கெடுக்க வருது
நலியோர் தம்மை நசுக்க வருது
மலிவாய் எங்கும் மண்ணில் வருது

மரணம் காட்டி மாய்க்க வருது
இரவும் பகலும் எதிலும் வருது
உறவிலும் பகையிலும் உள்ளே வருது
மறக்க நினைத்தால் மறுபடி வருது

அலைபோல் தொடர்ந்து அழிக்க வருது
மலையெனப் பெருத்து மருட்ட வருது
குலைநடுங்க எமனாய்க் கொல்ல வருது
நிலையில்லா உலகில் நிலைக்க வருதோ?

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading