ஔவை

வலி
====
வலிய வருது விரட்டவும் வருது
சலிப்புக் காட்டச் சடுதியாய் வருது
எலிக்கும் வருது எருமைக்கும் வருது
கலியில் எங்கும் கனமாய் வருது

பலிகள் பெருகப் பக்கம் வருது
கிலியில் தள்ளிக் கெடுக்க வருது
நலியோர் தம்மை நசுக்க வருது
மலிவாய் எங்கும் மண்ணில் வருது

மரணம் காட்டி மாய்க்க வருது
இரவும் பகலும் எதிலும் வருது
உறவிலும் பகையிலும் உள்ளே வருது
மறக்க நினைத்தால் மறுபடி வருது

அலைபோல் தொடர்ந்து அழிக்க வருது
மலையெனப் பெருத்து மருட்ட வருது
குலைநடுங்க எமனாய்க் கொல்ல வருது
நிலையில்லா உலகில் நிலைக்க வருதோ?

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading