” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஔவை

வலி
====
வலிய வருது விரட்டவும் வருது
சலிப்புக் காட்டச் சடுதியாய் வருது
எலிக்கும் வருது எருமைக்கும் வருது
கலியில் எங்கும் கனமாய் வருது

பலிகள் பெருகப் பக்கம் வருது
கிலியில் தள்ளிக் கெடுக்க வருது
நலியோர் தம்மை நசுக்க வருது
மலிவாய் எங்கும் மண்ணில் வருது

மரணம் காட்டி மாய்க்க வருது
இரவும் பகலும் எதிலும் வருது
உறவிலும் பகையிலும் உள்ளே வருது
மறக்க நினைத்தால் மறுபடி வருது

அலைபோல் தொடர்ந்து அழிக்க வருது
மலையெனப் பெருத்து மருட்ட வருது
குலைநடுங்க எமனாய்க் கொல்ல வருது
நிலையில்லா உலகில் நிலைக்க வருதோ?

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan