நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

ஔவை

வலி
====
வலிய வருது விரட்டவும் வருது
சலிப்புக் காட்டச் சடுதியாய் வருது
எலிக்கும் வருது எருமைக்கும் வருது
கலியில் எங்கும் கனமாய் வருது

பலிகள் பெருகப் பக்கம் வருது
கிலியில் தள்ளிக் கெடுக்க வருது
நலியோர் தம்மை நசுக்க வருது
மலிவாய் எங்கும் மண்ணில் வருது

மரணம் காட்டி மாய்க்க வருது
இரவும் பகலும் எதிலும் வருது
உறவிலும் பகையிலும் உள்ளே வருது
மறக்க நினைத்தால் மறுபடி வருது

அலைபோல் தொடர்ந்து அழிக்க வருது
மலையெனப் பெருத்து மருட்ட வருது
குலைநடுங்க எமனாய்க் கொல்ல வருது
நிலையில்லா உலகில் நிலைக்க வருதோ?

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan