மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

சர்ளா தரன்

வலி சுமந்து சென்ற நாடு
விழி சொரிந்து சென்ற காடு
உயிர் தந்த உடம்பு வெந்தது
புகை கொண்டு கலந்தது காற்று
பகை இன்றி வாழ்ந்தவர்
புகையாக போனதுவோ
கலி உலகம் விட்டு பிரிந்ததேனோ

விழி நிமிர்த்தி பார்க்கையில்
வகை தொகையாய் மக்கள்
வந்து கூடியதும்
தொந்தரவின்றி உன் உயிர் போனதும்
தொண்டனாய் நீர் வாழ்நத கொடை ஐயா

மெல்லிய உடலும்
மென்மையான உன் குரலும்
வல்லினம் இன்றிய உன் வளர்ப்பும்
வாய் பிழக்க வைக்குதப்பா
பந்தைய குதிரையாய் ஓடும் என வாழ்வில்
வெந்த உன் உடம்பு
வேதனையை தருகுதப்பா
வல்லவனான உன் உருவம் காணாது
வலிக்குதப்பா என் இதயம்

Nada Mohan
Author: Nada Mohan