மனிதா மனிதா விழித்தெழு..!

சிவருபன் சர்வேஸ்வரி

மனிதா மனிதா விழித்தெழு..!

மனிதா மனிதா விழித்து எழு
மனிதம் சிறக்க துணிந்து எழு
மலைபோல் துன்பம் குவிந்த போதும்
அஞ்சாமையுடன் என்றும் அழித்து எழு
வஞ்சம் போக்கியும் நடப்பாய் பாதையில்
கஞ்சம் இன்றியே கனிவாய் சிறப்பாய்

உண்மையாக வாழவும் உறுதியும் எடுப்பாய்

பண்பாகப் பழகியும் நன்மைகள் செய்வாய்

ஊழல்கள் இன்றியே உலகினில் நின்றால்

போற்றும் வழியும் பிறந்தே வருமே

பாரும் யாரும் உணரும் போதிலே
பகிர்ந்து கொள்ளும் மனமும் வேண்டும்

பரணியில் வாழுவரையில் பாவமமும் செய்யாதே

படைத்தவன் அருளலில் கருணையும் பிறக்கட்டும்

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading