கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

சாளரத்தின் ஒளியினிலே..

சிவருபன் சர்வேஸ்வரி

சாளரத்தின் ஒளியினிலே..

சாளரத்தின் ஒளியினிலே வெளியே நோக்கினேன்

பூஞ்சோலையின் மலர்வினிலே மனதையும் செலுத்தினேன்

பலவண்ணச் சிட்டுக்கள் பூக்கள் மேலிருந்தன
தேனைச் சுவைப்பதற்கு பறந்து பறந்தே சுற்றின

சுதந்திரமான பிறவிகள்
கச்சிதமாய் திரிந்தன

கேள்வியும் இல்லை நினைத்ததும் நடக்குமே

வெளியே பார்த்த பார்வையிலே எண்ணமும்

சுழன்றன மனிதர்களின் சுதந்திரத்தின் தோற்றமதை

எண்ணியும் முடிக்கவும் முடியாத ஏழைகள்

இருந்தும் எடுக்கவும் முடியாத கைவிலங்கு

அடக்கியே வைத்து ஆசைகள் அழிவதெத்தனை

காணும் சுகங்களும் இன்றிக் கருகும்மலர்கள் எத்தனை

அலையலையாய் திரளும் கற்பனையை மெல்லவும் முடிவிட்டேன்.

-சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading