” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 279
“விடியுமா தேசம்?”

ஆண்ட தமிழர் தம்
அடையாளம் தொடர
ஆளும் வேட்கை
அணையா தீயாய்

மாண்டவர் கோடி
மண் இதில் போரில்
மறப்போர் அறப்போர்
மறுபடி மறிபடி

எங்கள் பரம்பரை
இருப்பு இழப்பு
இருந்த பரப்புமோ
இழப்பு இழப்பு

மதமும் மொழியும்
மதம் கொண்ட மனமும்
மாறாத பேரினம்
மலருமா தேசம்?

நீலம் பச்சையாய்
நீண்டது ஆட்சி
நிலவிய வறுமையால்
நிமிர்ந்தது சிவப்பு.

வடக்கை கிழக்கை
வழக்காடிப் பிரித்தவர்
வருத்திய சுனாமிக்குள்
வஞ்சகம் விதைத்தவர்

தலைகளின் தொகையே
தலைமையை தெரியும்
தமிழர் தேசத்துக்கு
விடியலா பிறக்கும்?
-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan