தியாகி திலீபன்

நகுலா சிவநாதன்

தியாகி திலீபன்

உண்ணா நோன்பு இருந்த திலீபன்
மண்ணின் விடிவிற்காய் தன்னுயிர்
ஆகுதி ஆக்கினான்
தன்னைத் வருத்தி உடலை உருக்கி
உணர்வை சுருக்கி உலகிற்கு இழந்தான்

நல்லூரின் மன்றலிலே நம்தமிழர் விடிவிற்காய்
சொல்லோனே மருத்துவனே சோதியானீர்
கல்லோனே கற்றவனே கண்ணீரில் காணிக்கை
பல்லோரும் பார்க்க உம்முயிர் பிரிந்ததே!

வல்லோனே வண்டமிழர் உரிமைக்காய்
வைத்த கண் வாங்காமல் விழித்திருந்தீர்
காப்பாற்றுவார் என்றெண்ணி காத்திருந்தோம்
காலனவன் பிடியினிலே காணிக்கை ஆனதோ!
தியாக தீபம் திலீபனின் தியாகத்தைப் போற்றுவோம்

நகுலா சிவநாதன் 1779

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading