பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

திசைகாட்டி

நகுலா சிவநாதன்

திசைகாட்டி

அறிவின் ஊற்றாய் ஆற்றலின் பேரொளிகள்
நெறியின் வரமாய் நிலைக்கும் ஆசான்கள்
பொறியாய் நுட்பம் காட்டியே
பொங்கிடும் அறிவை புகுத்திடும் உளிகள்

அகரம் காட்டி சிகரம் தொடவே
ஆற்றலின் உயர்வை கூடவே செதுக்கி
போற்றிடும் பெருமகனாய் மாணவரை
பற்றிட வைக்கும் அறிவின் ஊற்றுகள்

கல்வியின் நுணுக்கங்களை திசையெங்கும் பரப்பியே
கனிவுடன் பேச எழுத வைக்கும் பொக்கிசங்கள்
பள்ளியின் மூலவேராய் பாடத்தை கற்றிட
அள்ளியே அறிவைத் தந்திடும்
அவனியில் பெருமை திசைகாட்டி ஆசிரியரே!
அன்பெனும் ஊற்றாய் அமைந்த பெருவிருட்சங்கள்
அகலாய் ஒளிர்க! நிலவாய்ப் பொழிக!
ஆசிரியம் வாழ்க!

நகுலா சிவநாதன் 1780

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading