” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கவிதை நேரம்-10.10.2024 கவி இலக்கம்-1929 புரட்சிப்பெண் மாலதி –

Jeya Nadesan

கவிதை நேரம்-10.10.2024
கவி இலக்கம்-1929
புரட்சிப்பெண் மாலதி
——————
தமிழீழ விடுதலைப் போராட்டம்
ஈழ மண்ணுக்காக புரட்சிப்பெண் மாலதி
விடுதலை பாதையில் வீர நடை போட்டவள்
தனி அடையாளமாய் கால் பதித்தவள்
மன்னார் பிறந்து சகாயசீலியா மாலதி
அமைதிப் படையின் போர்க் களத்தில்
10.10.1987 ல் இந்திய இராணுவ முனையில்
சரி சமனாக நின்று போராடி சாதித்தவள்
காலில் குண்டு பட்டு படு காயப்பட்டவள்
கழுத்திலிருந்து நஞ்சை அருந்தி மடிந்தவள்
முதலாவது பெண் வித்தாய் மாலதி பெயரானாள்
புரட்சிப் பெண்ணாக அவதாரம் எடுத்தாள்
வீரத்தில் முதல் பெண்ணாக விதையானாள்
தமிழர்கள் தலை நிமிர வழிகாட்டி மறைந்தாள்
விதையாகி மண்ணில் விழுதாகி உயர்ந்தவள்

Nada Mohan
Author: Nada Mohan