ராணி சம்பந்தர்

15.10.24
ஆக்கம் 162
பெருச்சாளி

அருவருப்பு ஆரவாரம்
இன்றி நறு நறுவெனக்
கடித்துக் குதறியதை
உருக்குலைத்துத் தான்
பெருத்துக் கொழுத்திடுமே

நிறமாறும் பச்சோந்தி
கருவறுப்பது தனியே பேரினவாதி அன்றி
தமிழ் அரசியல் ஊரினவாதியே
பழுத்த காய்கள்
பேரெடுக்கத் தன்
ஊரவனைப் பழுதாக்கி
உழுத்து அழித்திடுமே

உதிரும் தமிழரசுக்கட்சி
தன் ஊமைப் பசிக்கு
தான் நிலைத்து நிற்க
தமிழ் தேசியம் எனும்
உணர்வை முழுதாய்
உண்டு விழுங்கிடும்
பெருச்சாளிகளே.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading