” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர்

15.10.24
ஆக்கம் 162
பெருச்சாளி

அருவருப்பு ஆரவாரம்
இன்றி நறு நறுவெனக்
கடித்துக் குதறியதை
உருக்குலைத்துத் தான்
பெருத்துக் கொழுத்திடுமே

நிறமாறும் பச்சோந்தி
கருவறுப்பது தனியே பேரினவாதி அன்றி
தமிழ் அரசியல் ஊரினவாதியே
பழுத்த காய்கள்
பேரெடுக்கத் தன்
ஊரவனைப் பழுதாக்கி
உழுத்து அழித்திடுமே

உதிரும் தமிழரசுக்கட்சி
தன் ஊமைப் பசிக்கு
தான் நிலைத்து நிற்க
தமிழ் தேசியம் எனும்
உணர்வை முழுதாய்
உண்டு விழுங்கிடும்
பெருச்சாளிகளே.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan