உதிர்கின்ற இலைகளே,,!!!!!,

நேவிஸ் பிலிப் கவி இல (151) 17/10/24

அரும்பாகி தளிராகி
துளிராகி இலையாகி
பூவோடும் பிஞ்சோடும்
காயோடும் கனியோடும்
உறவாடி விளையாடி
தென்றலில் அசைந்தாடி

குளிர் நிழல் பரப்பி
பச்சை வண்ணமாய்
பசும் சோலையாய் படர்ந்து

ஒளி சேர்க்கை பணியாற்றி
கார்காலம் வரக் கண்டு
கடமை முடிந்ததென
மரத்திற்கு பாரமின்றி
தயங்கா உள்ளமுடன்
உதிர்ந்திட்ட இலைகளே

பழுப்பும் மஞ்சளுமாய்
பார்த்த இடமெங்கும்
அலைபோல புரள்கின்ற
உதிர்ந்திட்ட இலைகளே

வீழினும் உரமாக
இலையாய் பிறந்திடனினும்
இதுவே உயர்ந்த நிலை
வாழ்வின் மறு பிறவியாய்
கிளைகளில் மீண்டும் துளித்திடுவீர்.

நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading