உதிர்கின்ற இலைகளே

சிவருபன் சர்வேஸ்வரி

உதிர்கின்ற இலைகளே

காலம் மாறும் நேரம் மாறும்//
காயும் கனியாகும் கருத்தும் பரிமாறும்//

வேளை வரும்போது நன்மையும் தீமையும் நடக்கும்//

காவோலை விழவும் குருத்தோலை சிரிக்கும்//

இலையுதிர் காலமும் துளிர்பதற்கு ஆதாரம்//

தலைகுனிந்து நடப்பது தலைநிமிந்து நிற்பதற்காக//
உதிர்வுகளைக் கண்டு அச்சம் கொள்ளாதீர்//

உயர்வுகள் வரும் என்றே பெருமைகொள்வாய்//

நல்லநேரம் கூடும் நல்கிடும் நன்மையும் சேரும்//

வளமும் வாழ்வும் சிறக்கும் என்றும் //
வறுமையும் நீங்கியோ போகும் உணர்வாய் //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading