நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

உதிர்கின்ற இலைகளே

சிவருபன் சர்வேஸ்வரி

உதிர்கின்ற இலைகளே

காலம் மாறும் நேரம் மாறும்//
காயும் கனியாகும் கருத்தும் பரிமாறும்//

வேளை வரும்போது நன்மையும் தீமையும் நடக்கும்//

காவோலை விழவும் குருத்தோலை சிரிக்கும்//

இலையுதிர் காலமும் துளிர்பதற்கு ஆதாரம்//

தலைகுனிந்து நடப்பது தலைநிமிந்து நிற்பதற்காக//
உதிர்வுகளைக் கண்டு அச்சம் கொள்ளாதீர்//

உயர்வுகள் வரும் என்றே பெருமைகொள்வாய்//

நல்லநேரம் கூடும் நல்கிடும் நன்மையும் சேரும்//

வளமும் வாழ்வும் சிறக்கும் என்றும் //
வறுமையும் நீங்கியோ போகும் உணர்வாய் //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan