மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 283
22/10/2024 செவ்வாய்
“ஆசான்”
ஆசான் என்பவன் திசைகாட்டி!
அவனே வாழ்க்கைப் படகோட்டி!
தோஷம் நீக்கும் தொலைகாட்டி!
தொல்லை விலக்கும் வழிகாட்டி!

கல்விப் பால்தரும் முலையூட்டி!
கற்பனை வளமுடன் அறிவூட்டி,
சொல்லும் பொருள் மெருகூட்டி,
சுவைக்க வைத்திடும் சுகமூட்டி!

கல்விக் கொடையினில் கர்ணன்!
கலைகள் படைப்பதில் மன்னன்!
சொல்லில் அவனே விண்ணன்!
சோதனை காலத்தில் வில்லன்!

சுமைகள் சுமக்கும் பாரம்தூக்கி!
சோகம் மறைக்கும் வேடம்தாங்கி!
இமைகள் மூடாமல் இசைவாக்கி!
இன்னரும் கடமைப் பிறப்பாக்கி!

இலைமறை காயாய் இருப்பவரை
இலகில் அடையாளம் கண்டவரை
கலைமகள் கடாட்சம் தரும்வரை
காத்திடும் ஆசானே முதல்நிரை!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading