பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 283
22/10/2024 செவ்வாய்
“ஆசான்”
ஆசான் என்பவன் திசைகாட்டி!
அவனே வாழ்க்கைப் படகோட்டி!
தோஷம் நீக்கும் தொலைகாட்டி!
தொல்லை விலக்கும் வழிகாட்டி!

கல்விப் பால்தரும் முலையூட்டி!
கற்பனை வளமுடன் அறிவூட்டி,
சொல்லும் பொருள் மெருகூட்டி,
சுவைக்க வைத்திடும் சுகமூட்டி!

கல்விக் கொடையினில் கர்ணன்!
கலைகள் படைப்பதில் மன்னன்!
சொல்லில் அவனே விண்ணன்!
சோதனை காலத்தில் வில்லன்!

சுமைகள் சுமக்கும் பாரம்தூக்கி!
சோகம் மறைக்கும் வேடம்தாங்கி!
இமைகள் மூடாமல் இசைவாக்கி!
இன்னரும் கடமைப் பிறப்பாக்கி!

இலைமறை காயாய் இருப்பவரை
இலகில் அடையாளம் கண்டவரை
கலைமகள் கடாட்சம் தரும்வரை
காத்திடும் ஆசானே முதல்நிரை!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading