” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 283
22/10/2024 செவ்வாய்
“ஆசான்”
ஆசான் என்பவன் திசைகாட்டி!
அவனே வாழ்க்கைப் படகோட்டி!
தோஷம் நீக்கும் தொலைகாட்டி!
தொல்லை விலக்கும் வழிகாட்டி!

கல்விப் பால்தரும் முலையூட்டி!
கற்பனை வளமுடன் அறிவூட்டி,
சொல்லும் பொருள் மெருகூட்டி,
சுவைக்க வைத்திடும் சுகமூட்டி!

கல்விக் கொடையினில் கர்ணன்!
கலைகள் படைப்பதில் மன்னன்!
சொல்லில் அவனே விண்ணன்!
சோதனை காலத்தில் வில்லன்!

சுமைகள் சுமக்கும் பாரம்தூக்கி!
சோகம் மறைக்கும் வேடம்தாங்கி!
இமைகள் மூடாமல் இசைவாக்கி!
இன்னரும் கடமைப் பிறப்பாக்கி!

இலைமறை காயாய் இருப்பவரை
இலகில் அடையாளம் கண்டவரை
கலைமகள் கடாட்சம் தரும்வரை
காத்திடும் ஆசானே முதல்நிரை!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan