பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

பசுமையான நினைவுகள்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-39
24-10-2024

பசுமையான நினைவுகள்

பசுமையான நினைவுகள்
பசுமரத்தாணிப் பதிவுகள்
ஆடிப்பாடி விளையாடிய தருணங்கள்
அகம் குளிர்ந்த காலங்கள்

ஒரு வீட்டில் அடுப்பெரித்து
ஊரெல்லாம் பசியற்று
உறவெல்லாம் ஒன்றாய்க் கூடி
உலக நடப்பறியும் பொற்காலம்!

நண்பி வீடும் என்வீடாய்
நல்லது கெட்டது பகிர்ந்து
குடையை மடக்கி மழையில் நனைந்து
குதுகலமாய் வாழ்ந்த காலமது!

மரத்திலேறி பழம் பறித்தோம்
மாடு கன்று மறித்து நின்றோம்
உடன்பிறப்பின் உதவியெல்லாம்
நிழலாய் வருமே எம்முடனே…

தாத்தா பாட்டி உறவெல்லாம்
தங்கமாய் காத்து வந்தோம்
உற்றார் உறவுகள் கூட
ஊர் போற்ற மதித்து நின்றோம்

வீதிப் பிரச்சனை ஏதுமென்றால்
வீடு வந்திடும் எமக்குமுன்
தந்தை முகத்தின் கண்டிப்பில்
தயங்கி தாயை அணைத்திடுவோம்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading