28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
பசுமையான நினைவுகள்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-39
24-10-2024
பசுமையான நினைவுகள்
பசுமையான நினைவுகள்
பசுமரத்தாணிப் பதிவுகள்
ஆடிப்பாடி விளையாடிய தருணங்கள்
அகம் குளிர்ந்த காலங்கள்
ஒரு வீட்டில் அடுப்பெரித்து
ஊரெல்லாம் பசியற்று
உறவெல்லாம் ஒன்றாய்க் கூடி
உலக நடப்பறியும் பொற்காலம்!
நண்பி வீடும் என்வீடாய்
நல்லது கெட்டது பகிர்ந்து
குடையை மடக்கி மழையில் நனைந்து
குதுகலமாய் வாழ்ந்த காலமது!
மரத்திலேறி பழம் பறித்தோம்
மாடு கன்று மறித்து நின்றோம்
உடன்பிறப்பின் உதவியெல்லாம்
நிழலாய் வருமே எம்முடனே…
தாத்தா பாட்டி உறவெல்லாம்
தங்கமாய் காத்து வந்தோம்
உற்றார் உறவுகள் கூட
ஊர் போற்ற மதித்து நின்றோம்
வீதிப் பிரச்சனை ஏதுமென்றால்
வீடு வந்திடும் எமக்குமுன்
தந்தை முகத்தின் கண்டிப்பில்
தயங்கி தாயை அணைத்திடுவோம்.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...