18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
பசுமையான நினைவுகள்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-39
24-10-2024
பசுமையான நினைவுகள்
பசுமையான நினைவுகள்
பசுமரத்தாணிப் பதிவுகள்
ஆடிப்பாடி விளையாடிய தருணங்கள்
அகம் குளிர்ந்த காலங்கள்
ஒரு வீட்டில் அடுப்பெரித்து
ஊரெல்லாம் பசியற்று
உறவெல்லாம் ஒன்றாய்க் கூடி
உலக நடப்பறியும் பொற்காலம்!
நண்பி வீடும் என்வீடாய்
நல்லது கெட்டது பகிர்ந்து
குடையை மடக்கி மழையில் நனைந்து
குதுகலமாய் வாழ்ந்த காலமது!
மரத்திலேறி பழம் பறித்தோம்
மாடு கன்று மறித்து நின்றோம்
உடன்பிறப்பின் உதவியெல்லாம்
நிழலாய் வருமே எம்முடனே…
தாத்தா பாட்டி உறவெல்லாம்
தங்கமாய் காத்து வந்தோம்
உற்றார் உறவுகள் கூட
ஊர் போற்ற மதித்து நின்றோம்
வீதிப் பிரச்சனை ஏதுமென்றால்
வீடு வந்திடும் எமக்குமுன்
தந்தை முகத்தின் கண்டிப்பில்
தயங்கி தாயை அணைத்திடுவோம்.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
19
Jun
க.குமரன ( வெற்றி )
தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும்...
19
Jun
“மதிமகன்”
வெற்றி”(359)
எட்டி எட்டிப் பார்க்கும்
எதிரிலும் வந்தும் நிற்கும்
கட்டி அணைக்க போக…
கண்ணாம் பூச்சி காட்டும்!
கிட்டுதென...
19
Jun
சிவரூபன் சர்வேஸ்வரி
செந்தூரப்பூவே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே//
மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே//
ஒய்யாரமாக ...