சக்தி சக்திதாசன்

புதிர். சந்தம் சிந்தும் சந்திப்பு 284
விருப்ப தலைப்பு
உயிரையும் கடந்து
உள்ளே இருப்பது
உணர்வெனில்
உண்மையாய் அதன்
விலைதான் என்ன ?

கடலையும்
கடந்து செல்வது
கதைபேசும் மனமெனில்
காற்றிலே தவழும்
கணங்களின்
கனம் தானென்ன ?

நிலைவையும் தாண்டி
நீந்தும் அந்த
நினைவுகள் எனில்
நிறுத்துப்பார்க்கும் போது
நிற்குமா அதன் எடை ?

முகிலின் பாரம் சுமக்க 
முடியா மென்மையானது 
இதயம் எனில்
தொடரும் துரோகம் சகிக்கும்
பொறுமை கொண்டது எப்படியோ ?

இருட்டையும் மறைக்கும்
கருமை கொண்டவன்
இன்றைய உலகில் மன்னன்
இதன் மர்மமும் என்ன ?

விளக்க முடியா
வினாக்கள்
விடையறியாமல் மனதில்
விளைந்து கொண்டிருக்கும் போது
விடிந்தது உலகம் என
வீணாக பிதற்றிக் கொள்ளும்
வேடிக்கை காணீர் !

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

    Continue reading