” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சக்திதாசன்

புதிர். சந்தம் சிந்தும் சந்திப்பு 284
விருப்ப தலைப்பு
உயிரையும் கடந்து
உள்ளே இருப்பது
உணர்வெனில்
உண்மையாய் அதன்
விலைதான் என்ன ?

கடலையும்
கடந்து செல்வது
கதைபேசும் மனமெனில்
காற்றிலே தவழும்
கணங்களின்
கனம் தானென்ன ?

நிலைவையும் தாண்டி
நீந்தும் அந்த
நினைவுகள் எனில்
நிறுத்துப்பார்க்கும் போது
நிற்குமா அதன் எடை ?

முகிலின் பாரம் சுமக்க 
முடியா மென்மையானது 
இதயம் எனில்
தொடரும் துரோகம் சகிக்கும்
பொறுமை கொண்டது எப்படியோ ?

இருட்டையும் மறைக்கும்
கருமை கொண்டவன்
இன்றைய உலகில் மன்னன்
இதன் மர்மமும் என்ன ?

விளக்க முடியா
வினாக்கள்
விடையறியாமல் மனதில்
விளைந்து கொண்டிருக்கும் போது
விடிந்தது உலகம் என
வீணாக பிதற்றிக் கொள்ளும்
வேடிக்கை காணீர் !

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan