சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_167

“அழியாத கோலம்”
அரிசி மாவுகோலம்
அழகு வண்ணஜாலம்
எறும்பு பூச்சிக்கு பானம்!

காலை மாலை
வாசலில் கோலமிட
மாகலட்சுமி
வீட்டில் வாசம் செய்வாள்!

பொட்டு வச்சு
பூ வச்சு
பட்டு புடவை கட்டி
அழகு காட்டும் கோலம்!

மெட்டி ஒலி
இசைக்க
அன்ன நடை
நடக்க
தமிழ்பெண்ணோ
கண்ணோ என அடையாளம்
காட்டும் கோலம்!

மரம் செடி கொடி
நிறம் மாறும்
கோலம்
குளிர்காலத்தை உணர்த்தும் கோலம்!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
02.11.24

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading