” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_167

“அழியாத கோலம்”
அரிசி மாவுகோலம்
அழகு வண்ணஜாலம்
எறும்பு பூச்சிக்கு பானம்!

காலை மாலை
வாசலில் கோலமிட
மாகலட்சுமி
வீட்டில் வாசம் செய்வாள்!

பொட்டு வச்சு
பூ வச்சு
பட்டு புடவை கட்டி
அழகு காட்டும் கோலம்!

மெட்டி ஒலி
இசைக்க
அன்ன நடை
நடக்க
தமிழ்பெண்ணோ
கண்ணோ என அடையாளம்
காட்டும் கோலம்!

மரம் செடி கொடி
நிறம் மாறும்
கோலம்
குளிர்காலத்தை உணர்த்தும் கோலம்!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
02.11.24

Nada Mohan
Author: Nada Mohan