சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_168

“சூர வதை”
நெற்றி கண்ணில்
தோன்றிய முருகன்
சூரபத்மனை
வதம் செய்தான்
முருகன் சூரனை அழித்தான்
கந்தசஷ்டி அனுதானம்!

முருகன் சூரனிடம்
சேனை தலைவரான
வீரபாகுவை
தூது அனுப்பி
ஆணவத்தை
ஆடக்கும்படி
எச்சரித்தார்
ஆணவம் தலை தூக்க!

பிரமா விஷ்ணு சிவன்
மும்மூத்திகளும் முருகனை அனுப்பியும்
சூரன் ஆணவம் அடங்கவில்லை!

மாமரமாக
மாறி
தப்பி ஓட முயன்றான் சூரன்
முருகன் வேலாயுதத்தை மாமரத்தின் மீது எய்தார்!

மாமரம் இரண்டாக பிளந்தது
பாதி மயில்
மறுபாதி சேவல்லாக
மாற்றிய முருகன்!

தனது வாகனமாகவும் கொடியாக மாற்றினார்
முருகன்!

சூரன் மாமரமான
இடம்
மாம்பாடு என்று அழைக்கபடுகிறது!

பூராணகதைகளில் நடந்தேறிய ஆணவம்
சூரவதை
நம் நிலத்திலும் புலத்திலும்
நடந்தேறும்
போர்களை
கண்ணுற்று
பார்க்கின்றோம்….
கண்கலங்கி
நிக்கின்றோம்!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
09.11.24

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading