பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ஒளியிலே தெரிவது

சிவருபன் சர்வேஸ்வரி

ஒளியிலே தெரிவது

ஒளியிலே தெரிவது ஓலத்தின் குரல்கள் //

நிலவியே நிற்பதும் நீண்ட கதைகள் //
குலவியே வந்திடும் கலைந்த கோலங்கள் //

சிலைவியே குலையவும் சிதைத்த நினைவுகள்//

புதைத்த எண்ணமும் திரண்டுமே எழுந்திடும் //
விதைத்த குழிகளில் வீரமும் பெருகிடும்//
தளைத்து நின்றதே தரணியில் அன்றும் //
முளைத்து நிற்கின்றதே
ஒளியிலே சுடராய் //

சளையாத தாகம் கிளையாகப் பரவியே //
விதையான முத்தாய் தமிழ்மணம் வீசிட //

மதயானை வந்து மிதித்தேயழித்தது //
முள்ளும் மலரும் முழங்கிடும் கீதம் //
இடியும் இடித்தது போன்றே இதயமும் நொருங்கும் //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading