அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

ஒளியிலே தெரிவது

சிவருபன் சர்வேஸ்வரி

ஒளியிலே தெரிவது

ஒளியிலே தெரிவது ஓலத்தின் குரல்கள் //

நிலவியே நிற்பதும் நீண்ட கதைகள் //
குலவியே வந்திடும் கலைந்த கோலங்கள் //

சிலைவியே குலையவும் சிதைத்த நினைவுகள்//

புதைத்த எண்ணமும் திரண்டுமே எழுந்திடும் //
விதைத்த குழிகளில் வீரமும் பெருகிடும்//
தளைத்து நின்றதே தரணியில் அன்றும் //
முளைத்து நிற்கின்றதே
ஒளியிலே சுடராய் //

சளையாத தாகம் கிளையாகப் பரவியே //
விதையான முத்தாய் தமிழ்மணம் வீசிட //

மதயானை வந்து மிதித்தேயழித்தது //
முள்ளும் மலரும் முழங்கிடும் கீதம் //
இடியும் இடித்தது போன்றே இதயமும் நொருங்கும் //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan