பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ஔவை

தாய் நாடே தலை நிமிர்வாய்
*********************************
ஆண்டுகள் பலதாய்
அடைந்தாய் துன்பம்
ஆண்ட முறையால்
இழந்தாய் ஒளியை
மீண்டு எழுவாய்
மிளிர்வாய் உலகில்
வேண்டித் தொழுவேன்
மனதால் உனக்காய்

உடனாய் இருந்து
உன்னை அழித்தோர்
கடனாய் வாங்கிக்
களிப்பில் வாழ்ந்தோர்
தொடர மாட்டார்
தோல்வி கண்டார்
இடர்கள் இல்லை
எங்கும் இன்பம்

சாபங்கள் நீங்கின
சாத்தான்கள் சரிந்தனர்
கோபங்கள் விலக்கிக்
கொண்டாடி மகிழ்வோம்
வேகமாய் நிமிர
வேற்றுமை மறப்போம்
பாகங்கள் வேண்டாம்
பண்போடு வாழ்வோம்.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading