” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஔவை

தாய் நாடே தலை நிமிர்வாய்
*********************************
ஆண்டுகள் பலதாய்
அடைந்தாய் துன்பம்
ஆண்ட முறையால்
இழந்தாய் ஒளியை
மீண்டு எழுவாய்
மிளிர்வாய் உலகில்
வேண்டித் தொழுவேன்
மனதால் உனக்காய்

உடனாய் இருந்து
உன்னை அழித்தோர்
கடனாய் வாங்கிக்
களிப்பில் வாழ்ந்தோர்
தொடர மாட்டார்
தோல்வி கண்டார்
இடர்கள் இல்லை
எங்கும் இன்பம்

சாபங்கள் நீங்கின
சாத்தான்கள் சரிந்தனர்
கோபங்கள் விலக்கிக்
கொண்டாடி மகிழ்வோம்
வேகமாய் நிமிர
வேற்றுமை மறப்போம்
பாகங்கள் வேண்டாம்
பண்போடு வாழ்வோம்.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan