சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ஔவை

தாய் நாடே தலை நிமிர்வாய்
*********************************
ஆண்டுகள் பலதாய்
அடைந்தாய் துன்பம்
ஆண்ட முறையால்
இழந்தாய் ஒளியை
மீண்டு எழுவாய்
மிளிர்வாய் உலகில்
வேண்டித் தொழுவேன்
மனதால் உனக்காய்

உடனாய் இருந்து
உன்னை அழித்தோர்
கடனாய் வாங்கிக்
களிப்பில் வாழ்ந்தோர்
தொடர மாட்டார்
தோல்வி கண்டார்
இடர்கள் இல்லை
எங்கும் இன்பம்

சாபங்கள் நீங்கின
சாத்தான்கள் சரிந்தனர்
கோபங்கள் விலக்கிக்
கொண்டாடி மகிழ்வோம்
வேகமாய் நிமிர
வேற்றுமை மறப்போம்
பாகங்கள் வேண்டாம்
பண்போடு வாழ்வோம்.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan