வண்ண நிலவே வருவாயே

சிவருபன் சர்வேஸ்வரி

வண்ண நிலவே வருவாயே

இருளுக்குள் ஒளியானாய் இசைபாடும் நிலவானாய்//

கடலுக்குள் உன்முகமும் கவினுறு அழகானதே//
நிலவே நீயும் நீங்காத காவியமே//

புலவிவரும் கவிதைக்கு புகழ்விளங்கும் வெண்ணிலாவே//

துள்ளியாடும் மனமும் பள்ளி கொள்ளவருவாய்//

பருவம் வந்தே நீயும் பூத்துநின்றாய் பொழுதில்//

வைகை பெறுமழகும் பெருமையுடன் நிற்கவே//
பசுமை கொண்ட இடமும் உன்னழகில் இயந்தே//

வெறுமையின்றி வானம் நட்சத்திரத்தைக் காட்டவும்//

வெண்புரவி போன்றே முகில்கள் கூட்டம் போடும் //
மயிலும் எழுந்து ஆடும் குயிலும் கூவிப் பாடும்//
மின்மினிகள் கூட ஒளியையேந்தி ஓடும்//

கலக்கம் தெளிய நீயும் கருணையுடன் வாராயோ //
விழித்துப் பார்க்க நீயுமா விரைந்தே ஓடி வாராய்//

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading