கல்லறைத் தீபங்கள்

நகுலா சிவநாதன்

கல்லறைத் தீபங்கள்

கல்லறையில் துயிலும் மாவீரரே
கணக்கின்றி உம்மைக்கொன்றனர் எதிரிகள்
சில்லறைகள் செய்த வலி சிறகிழந்து போனதே
சொல்லறைகள் ஒலிக்குது சொந்தமும் சொல்லியழுகுது

மண்ணின் மாவீர மணிகள் துயிலும்வாரம்
கண்ணின் இமைகளாய் காத்த தமிழீழம்
பெண்ணின் அணிகளும் பேராளுமை கொண்டே
மண்ணனைக் காக்க விடுதலைவேங்கையானார்

இன்று 15 வருடத்தின்பின் ஒளிர்கிறது தீபம்
கல்லறைகள் ஒளிர்கின்றன கார்த்திகையும் மலர்கிறது
எங்கள் மாவீர மணிகள் வருவார்கள்
மண்டியிட்டு வணங்கும் வீரம்
ஒருபோதும் சாவதில்லை
ஒளிரும் தீபத்தில் ஒளிரட்டும் இவர்கள்; கனவு

நகுலா சிவநாதன் 1787

Nada Mohan
Author: Nada Mohan

சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

Continue reading