நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

கல்லறைத் தீபங்கள்

நகுலா சிவநாதன்

கல்லறைத் தீபங்கள்

கல்லறையில் துயிலும் மாவீரரே
கணக்கின்றி உம்மைக்கொன்றனர் எதிரிகள்
சில்லறைகள் செய்த வலி சிறகிழந்து போனதே
சொல்லறைகள் ஒலிக்குது சொந்தமும் சொல்லியழுகுது

மண்ணின் மாவீர மணிகள் துயிலும்வாரம்
கண்ணின் இமைகளாய் காத்த தமிழீழம்
பெண்ணின் அணிகளும் பேராளுமை கொண்டே
மண்ணனைக் காக்க விடுதலைவேங்கையானார்

இன்று 15 வருடத்தின்பின் ஒளிர்கிறது தீபம்
கல்லறைகள் ஒளிர்கின்றன கார்த்திகையும் மலர்கிறது
எங்கள் மாவீர மணிகள் வருவார்கள்
மண்டியிட்டு வணங்கும் வீரம்
ஒருபோதும் சாவதில்லை
ஒளிரும் தீபத்தில் ஒளிரட்டும் இவர்கள்; கனவு

நகுலா சிவநாதன் 1787

Nada Mohan
Author: Nada Mohan