பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

கல்லறைத் தீபங்கள்

நகுலா சிவநாதன்

கல்லறைத் தீபங்கள்

கல்லறையில் துயிலும் மாவீரரே
கணக்கின்றி உம்மைக்கொன்றனர் எதிரிகள்
சில்லறைகள் செய்த வலி சிறகிழந்து போனதே
சொல்லறைகள் ஒலிக்குது சொந்தமும் சொல்லியழுகுது

மண்ணின் மாவீர மணிகள் துயிலும்வாரம்
கண்ணின் இமைகளாய் காத்த தமிழீழம்
பெண்ணின் அணிகளும் பேராளுமை கொண்டே
மண்ணனைக் காக்க விடுதலைவேங்கையானார்

இன்று 15 வருடத்தின்பின் ஒளிர்கிறது தீபம்
கல்லறைகள் ஒளிர்கின்றன கார்த்திகையும் மலர்கிறது
எங்கள் மாவீர மணிகள் வருவார்கள்
மண்டியிட்டு வணங்கும் வீரம்
ஒருபோதும் சாவதில்லை
ஒளிரும் தீபத்தில் ஒளிரட்டும் இவர்கள்; கனவு

நகுலா சிவநாதன் 1787

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading