23
Apr
பண்படுமோ பண்பாடு ??
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
பெளர்ணமி இரவில்….
=====================
வெட்ட வெளியிலொரு வட்ட முழுநிலவு
வானமதில் கதைபலதை உரைக்கும் -அது
வாழ்வுதனில் கனவுகளை நிறைக்கும்
கொட்டும் பனியிரவில் பட்டு உடல்நடுங்க
காதலது கண்சிமிட்டி அழைக்கும் – மனம்
காட்சிகளைக் கவியெழுத நினைக்கும்.
சிட்டுக் குயிலிரண்டு தொட்டுக் குலவிடவும்
சோலைமரம் தன்நிலையை மறக்கும் -அதில்
சேதிபல உள்மனதில் இருக்கும்
நட்ட நடுநிசியில் இட்ட கவி வரிகள்
நாளையதில் இனியவைகள் சேர்க்கும் -அது
நானிலத்தில் விடிவுகளை நோக்கும்.
ஒளவை.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.