சிவரூபன் சர்வேஸ்வரி

பனிப்பூ
ஃஃஃஃஃ

பனிவிழும் மழைத்துளியாய் காலத்தில் துளிரும் //
கனிவிழும் மரச்சோலை பூத்துமே காய்க்கவும் //
அலைமேவும் நிலமையும் அகன்றே போகுமே //

இனிமையும் கூடியே குளிர்மையும் கொட்டட்டும் //
தனிவழி இல்லையே தளராது பயணிக்க //
துணிவுதான் பிறக்கட்டும் துள்ளியே எழுந்திடுவாய் //

மலர்வுதான் மானிலம் மாண்புடன் சிறக்கட்டும் //

வீம்புமோ இல்லாது விடியலை நோக்கட்டும் //

கூம்பியது காணும் கரம்கூப்ப நீயெழுவாய் //

உயிர்பூ உன்னிடம் உகந்தது ஏற்றிடு //
வார்ப்பு ஒன்று இறைவன் வகுத்தது //
வரம்பு மீறாதே வரமுறையில் உள்ளது //
வேணாம் வீறாப்பு வெகுமதியாய் எழுவாய் //

தருவது பனிப்பூ எங்குமே பொழியுமே //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading