மாதவமே உந்தனை (690)

Selvi Nithianandan

மாதவமே உந்தனை

மரணத்தின் வலியே
மாறிடா வேதனை
மண்ணறை சான்றும்
மகத்தான சாதனை

வேள்வியின் வித்து
வெந்தணலின் முத்து
கல்லறை காவியம்
கடந்திடா சரித்திரம்

கருவறை சுமக்காத
கல்லறை மாமணிகள்
கள்ளமே அறியாத
காவிய வேங்கைகள்

கார்த்திகை உமக்காய்
காரிருள் மேகமாய்
காந்தளும் மலருமாய்
காவலர் வாகையாய்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading