” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மாதவமே உந்தனை (690)

Selvi Nithianandan

மாதவமே உந்தனை

மரணத்தின் வலியே
மாறிடா வேதனை
மண்ணறை சான்றும்
மகத்தான சாதனை

வேள்வியின் வித்து
வெந்தணலின் முத்து
கல்லறை காவியம்
கடந்திடா சரித்திரம்

கருவறை சுமக்காத
கல்லறை மாமணிகள்
கள்ளமே அறியாத
காவிய வேங்கைகள்

கார்த்திகை உமக்காய்
காரிருள் மேகமாய்
காந்தளும் மலருமாய்
காவலர் வாகையாய்

Nada Mohan
Author: Nada Mohan