பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ராணி சம்பந்தர்

03.12.24
ஆக்கம் 169
பனிப் பூ

வீசிடும் பனிப் பூ
பேசிடும் பல வடிவமதில் மோதிடும் வேகம்

மாசியில் புல் நுனியில்
மாசிப்பனி மூசி பூத்திடும் தாகம்

பசியில் புசிக்க நோய்க்கு அருமருந்து
ஆகும் வாழை இலையில் சொட்டுச்
சொட்டாய்க் குட்டி
முட்டும் மோகம்

ஒளியூட்டும் கதிரவன்
இடையில் கண் கூசும்
நடையில் பனிக் காலநிலை மாற்றமதில்

கல்மழை பொழிந்து
வீட்டு ஓடு , வாகனம்
பொட்டென உடையும்
பாகம்

வளிமண்டலத் தூசியோடு போராடும்
குளிரில் மழைத்துளி
பனித்துகழாகி உறைந்த பனிப் பாறை
வெப்பமதில் உருகும்
நீர் மட்டம் உயர வரும்
பேரழிவு சோகமே.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading