” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர்

03.12.24
ஆக்கம் 169
பனிப் பூ

வீசிடும் பனிப் பூ
பேசிடும் பல வடிவமதில் மோதிடும் வேகம்

மாசியில் புல் நுனியில்
மாசிப்பனி மூசி பூத்திடும் தாகம்

பசியில் புசிக்க நோய்க்கு அருமருந்து
ஆகும் வாழை இலையில் சொட்டுச்
சொட்டாய்க் குட்டி
முட்டும் மோகம்

ஒளியூட்டும் கதிரவன்
இடையில் கண் கூசும்
நடையில் பனிக் காலநிலை மாற்றமதில்

கல்மழை பொழிந்து
வீட்டு ஓடு , வாகனம்
பொட்டென உடையும்
பாகம்

வளிமண்டலத் தூசியோடு போராடும்
குளிரில் மழைத்துளி
பனித்துகழாகி உறைந்த பனிப் பாறை
வெப்பமதில் உருகும்
நீர் மட்டம் உயர வரும்
பேரழிவு சோகமே.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan