பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 288. அதோ !
அந்த வானத்தின்
அந்தத்திலே செந்நிறமாய் !
மறைந்து கொண்டே ஆதவன் . . .

இதோ
இந்த முற்றத்தின் 
இதயத்தில் இருளாய்த்
தவழ்ந்திடும் இரவு . . .

ஏதோ
எழுந்த கனவுகளில்
எழுதாத ஓவியமாய்
என்னென்னவோ சித்திரங்கள் . . .

தீதோ
தீண்டாத நினைவுகள்
தீயினைப் போலவே
தீய்க்குது நெஞ்சத்தின் உணர்வுகளை . . .

சூதோ
சூழ்ந்த சொந்தங்கள்
சூழ்ச்சியின் விளைநிலமாய் தீட்டிடும்
சூட்சுமத் தந்திரங்கள் . . .

மீதோ
மீண்டிருக்கும் காலத்தில்
மீட்டிடும் கானங்கள் எல்லாம்
மெளனமாய் இதயத்தினுள் புதைந்திடும் . . .

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading