பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

பாலதேவகஜன்

பனிப் பூ

இலையுதிர்ந்த மரங்களின்
நிர்வாணங்களை மறைத்து
மானம் காத்துக்கொண்ட
வானம் பொழிந்த ஆடையிது.

காட்ச்சிக்கு விருந்தாய்
கடமைக்கு தடையாய்
காணுமிடமெங்கிலும் பஞ்சாய்
படர்ந்து கிடக்கும் பனிப்பூவே!

வானம் சொரிந்த மலராய்
மண்ணை மூடிய நுரையாய்
பொங்கிய வடிகின்ற பாலாய்
நீ குவியல் கொள்கின்றாய்.

குழந்தைகள் குதூகலமாய்
கூடி விளையாடுடி
பொம்மைகள் ஆக்கி
பெருமகிழ்வு கொள்கின்றார்.

உன் மீது சறுக்கி
சாகசம் காட்ட்டிட
மலைகளை நோக்கியே
வீரர்கள் பயணங்கள் தொடர

வந்து சொரிந்த பூவே!
வாசல் தளுவிய பூவே!
வசந்தமும் உன்னாலே
வருத்தமும் உன்னாலே.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading