அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

ஐயோ வெள்ளம் கொண்டு போயிட்டா என்ட மச்சானை

வஜிதா முஹம்மட்்

ஐயோ வெள்ளம் கொண்டு போயிட்டா
என்ட மச்சானை

வானம் பிளந்து மழையும்
கொட்டுது

வயல் வரம்பும் நிரம்பி
ஊரே தள்ளி அடிச்சி நிற்கிது

உள்ளூர் ஏரி நிரம்பி வயல்வரம்பு
காணாமல் போனது

கடலும் ஆறும் காதல் கொண்டு
கலவை செய்யுது
கரைபுரண்டு மீீன்களெல்லாம்
கரையில் துள்ளுது

வேல வெட்டியின்றி வீட்டில்
கிடந்த என்ட மச்சான்

சும்மா இ௫ந்தவர உசிப்பேத்தி
ஊரச்சுத்தி வெள்ளம் பார்க்க

பக்கத்து வீட்டுக்காரன் தோணிகட்டி
ஜோடி போட்டு கூட்டிப்போனான்

தோல் மேல கைபோட்டு
சோக்கா போனாங்க ஓடி

வாகனேரி …மீயாங்குளக்கட்டுடைச்சி
வாய்க்காலுக்குள் தோணியுடைஞ்சி

மாச்சான் போன தோணிகவிழ்ந்து
காணமல் போனது தண்ணிக்குள்ளே
மறைச்சி

மூன்று நாளாத் தேடி
முற்படையும் அங்கு கூடி

என்ட தங்க மச்சானக் காணவில்ல
போடி
அவங்க போன தோணிய மட்டும்
இழுத்து வந்தாங்க ஊரே கூடி

ஆறு ஏழு புள்ளையோட
நடுத்தெ௫வில்ல நிற்கிறேன் பா௫

தாயையும் இந்தக் குட்டி கு௫மானப்
பெறுப்பு எடுப்பார் யா௫

பாரத்தை எல்லாம் என்ட தலையில
ஏற்றி விட்டு
வெள்ளத்தில வெடுக்கென்று
போய்விட்டிங்க தங்க மச்சான்

நல்ல தங்கால்போல நானும் வர
பாத்தேன்் மச்சான்
வெள்ளம் வடிஞ்சி வெள்ள நிவாரணம்
கொடுக்காங்க தங்க மச்சான்

அந்த லைனில நம்ம அர டசினுடன்
நிற்கேன்் என்ட தங்க மச்சான்

[௨ங்க ஊரின்் உண்மைச் நிகழ்வு
நிறையப் பெண்கள் விதவையானார்கள்்]

வஜிதா முஹம்மட்்

Nada Mohan
Author: Nada Mohan